Wednesday, March 14, 2012

அலையின் விலை


ஆழ அளவறியா
ஆதியினின்று
பொங்கிப் பிரவகித்துப்
பிணங்கிப் பிளிறித்
திமிருடன் திமிறி
ஊழிக் கூத்தாடும்
ஆழியதன் அலை

வெயிற் காய்ந்து
மழை உறிஞ்சி
மோனத் தவமிருந்து
பொறுமை பொதிந்து,
காலத்தேயும்
காலந்தாழ்ந்திடினும்
பரந்து பாய்விரித்துச்
சோராது காத்திருக்கும்
மணல் முன்னே

மண்டியிட்டு மடிகிறது;
மணல் தந்த முத்தத்தில்
மீண்டு உயிர் பெறுகிறது.

கரையின் மணலுக்கு
விலையாகிப் போகிறது
கடலின் அலை.

ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.

17 comments:

கோவி.கண்ணன் said...

அழகான கவிதை

சாந்தி மாரியப்பன் said...

//ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.//

அருமையிலும் அருமை.. அன்பினால் ஆகாததும் உண்டோ..

கோமதி அரசு said...

ஆரவார அரவங்கள்
அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி.//

அன்பு! அது எதையும் சாதிக்கும் மந்திரக்கோல் அல்லவா!

அருமையான் கவிதை.

ராமலக்ஷ்மி said...

/அன்பின் எல்லையில்
அடங்கி மடிந்து
அமிழ்வதென்பதொரு
அழகான நியதி./

ஆம் மலர். அழகிய நியதியைச் சொல்லும் கவிதையும் அழகு.

ஜீவி said...

அந்த முத்தாய்ப்பு
முத்தான முத்தல்லவோ?..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா..:)

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கோவி. மிக்க நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சாரல்..

பாச மலர் / Paasa Malar said...

அருள்

வாழ்க உங்கள் தொண்டு...தொடர்ந்து நடக்கும் பலவிதப் போராட்டங்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோமதி மேடம்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..அழகான நியதி அன்பு மட்டுமே..

பாச மலர் / Paasa Malar said...

வாழ்க்கைகும் அதுதானே முத்தாய்ப்பு ஜீவி..மிக்க நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

வாங்க கயல்...நன்றி..

பாச மலர் / Paasa Malar said...

அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி..

கோபிநாத் said...

அருமைக்கா ;-)

பாச மலர் / Paasa Malar said...

நன்றி கோபி..