Friday, January 29, 2010

வசெந்தம் - பொங்கல் / புத்தாண்டு விழா

சனவரி மாதம் 15 ம் நாள் வெள்ளியன்று 'வளைகுடா செந்தமிழ்ச் சங்கம்' - துவக்கவிழா, பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா இனிதே நடைபெற்றது. வார இறுதியான ஒவ்வொரு வியாழன் மாலை முதல் நள்ளிரவு வரை மகிழகம் ஒன்றில் சுமார் 50 பேர் தவறாமல் சந்தித்துக் களிப்பது கடந்த நான்கு ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வாரமும் நிகழும் இந்தச் சந்திப்பை, எங்களுக்கும் இன்னும் பலருக்கும் பயனுள்ள வகையில் மாற்றும் எண்ணம் அனவருக்கும் ஏற்பட 'வசெந்தம்' மலர்ந்தது.

ஒவ்வொரு முறையும் அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி மகிழும் நாங்கள், இந்த முறை வழக்கமான நண்பர்கள் மட்டுமல்லாமல் பல புது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினோம். உறியடித்தல், கபடி விளையாட்டு, கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு, தமிழ்ச் சொல் விளையாட்டு,சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி, பட்டி மன்றம், கிராமிய நடனம், பொங்கல் பண்டிகையின் சிறப்பை விளக்கும் நாடகம் என்று மிகவும் இனிதே நடந்தேறியது இவ்விழா.

சங்கத்தின் சமுதாயப் பணி குழுமத்தின் சார்பில், பொங்கல் நாளில், கோயம்புத்தூர் ஆசிரமம் ஒன்றில் மரக்கன்றுகள் நடும் பணியும் இனிதே நிறைவேற்றப்பட்டது. 2010 ஆண்டில் 2010 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்...என்ற உறுதியும் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தத்தில் இந்தத் தினம் மறக்க முடியாத முத்திரை பதித்து நிற்கிறது.

உறியடித்தல்

குழந்தைகள் விளையாட்டு

கபடி விளையாட்டு

கோலப்போட்டி
பட்டிமன்றம்

கிராமிய நடனம்
பொங்கல் நாடகம்

Friday, January 1, 2010

புத்தாண்டு 2010 - வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..


நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..விரைவில் உங்கள் வலைப்பூக்களிலும் உங்களைச் சந்திக்கிறேன்..


உங்களில் சிலருடன் இந்தியா வந்தபோது தொலைபேச முடிந்தத்தில் மிகவும் மகிழ்ச்சி..அதே நேரம் பலருடன் பேசமுடியாமல் போனது மிகவும் வருத்தம்..


இந்தியாவில் இந்த முறை மிகவும் ரசிக்கத்தக்க பயணங்கள் மேற்கொள்ள முடிந்தது.


நீண்ட வருடக் கனவான பூம்புகார்ப் பயணம் இனிதே நிறைவேறியது.


இங்கே வந்தபின் வழக்கமான நடைமுறை.....கொஞ்ச நாளாய் ப்ளாகர் பயன்படுத்துவதில் சிக்கல்..இப்படிப் பல காரணங்களால் உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை..

இதோ மீண்டும் உங்களைச் சந்திக்கும் ஆவலுடன் நான்..

புத்தாண்டு வாழ்த்துகள்!!