Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Friday, January 1, 2010

புத்தாண்டு 2010 - வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..


நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..விரைவில் உங்கள் வலைப்பூக்களிலும் உங்களைச் சந்திக்கிறேன்..


உங்களில் சிலருடன் இந்தியா வந்தபோது தொலைபேச முடிந்தத்தில் மிகவும் மகிழ்ச்சி..அதே நேரம் பலருடன் பேசமுடியாமல் போனது மிகவும் வருத்தம்..


இந்தியாவில் இந்த முறை மிகவும் ரசிக்கத்தக்க பயணங்கள் மேற்கொள்ள முடிந்தது.


நீண்ட வருடக் கனவான பூம்புகார்ப் பயணம் இனிதே நிறைவேறியது.


இங்கே வந்தபின் வழக்கமான நடைமுறை.....கொஞ்ச நாளாய் ப்ளாகர் பயன்படுத்துவதில் சிக்கல்..இப்படிப் பல காரணங்களால் உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை..

இதோ மீண்டும் உங்களைச் சந்திக்கும் ஆவலுடன் நான்..

புத்தாண்டு வாழ்த்துகள்!!

Thursday, February 26, 2009

உட்கார்ந்து யோசித்த போது

திடீர்ச்செயல் முனைதல்

ஒரு செயலுக்காக திடீரென்று முனைகையில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அந்தச் செயல் தொடர்கையில் சரி, இது நிரந்தரமல்லவே கொஞ்ச காலம்தானே என்ற சமாதானம் தானாகத் தேடி வரும். கஷ்டங்களை அனுசரிக்கப் பழகிப் போகும். முக்கியமான செயல் என்பதால் செம்மையாக வேறு செய்ய வேண்டும்.

தொடரும் அசௌகரியங்கள்

இவ்வாறு தொடரும் போது முக்கியமான செயல் தடைபடாமல் நடைபெறுமே ஒழிய, பல அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். என்னதான் மெனக்கெட்டுச் சமாளித்தாலும் இதுதொடர்ச்சியான அல்லலாகத் தோன்ற, செயலைக் கைவிட எண்ணம் தோன்றும்.

செயல் கைமாற்றம்

செயலைக் கைவிடச் சரியான சந்தர்ப்பத்தை மனம் எதிர்பார்க்கும். செயலைக் கைவிடவும் முடிவு ஏற்படும். செயலைக் கைமாற்ற சரியான நபரைத் தேடவேண்டியிருக்கும்.மனம் இச்செயல் புரியத் தேவையில்லாத, அது தரக்கூடிய அல்லல்கள் களையும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்.

ஊக்கம்

செயலைச் செவ்வனே செய்தமைக்காகப் பாராட்டுகள் மற்றும் மேலும் சிறப்பாகச் செயலாற்ற ஊக்கமளிப்பும், கைமாற்ற ஆளில்லாத காரணத்தால் செயலை மீண்டும் தொடரவேண்டிய நிலைமையும் ஏற்படும் சிலநேரம். 'நல்லவரே வல்லவரே' ரீதியிலான பாராட்டுகளுக்கு மனம் சற்றே கிறக்கப்படும். கிடைத்த ஊக்கத்தால் அசௌகரியங்கள் சமாளிக்கும் நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கையும் தைரியமும் எங்கிருந்தோ வரும்.

செயல் தொடர்ச்சி

மீண்டும் மனம் மாறிச் செயலுடன் ஒன்றிப் போகும். முன்னிருந்த நிலை மாறி மீண்டும் பல புதுத் தீர்மானங்கள் பிறக்கும். வாழ்க்கை மீண்டும் விட்டு விடவேண்டும் என்று நினைத்த இடத்தில் தொடரும்.

இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் மேற்கூறிய அனைத்தும் மீண்டும்............... Money கணக்கு Vs மணிக்கணக்கு Vs (இப்போது கூடவே) மனக்கணக்கும் சேர்ந்து கொள்ளமீண்டும் அவள் ஒரு தொடர்கதை ஆகிப் போனாள்.

(புரியவில்லையென்றால் படிக்க: Money கணக்கு Vs மணிக்கணக்கு)

Tuesday, November 4, 2008

ஆஹா..அடச்சீ..ஐயோ..அப்பாடா..

பொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்த பொன்முடி கொடுத்த அதிரடி பதில் அறிக்கை படிக்கையில் ஏதோவொரு சந்தோஷம்...ஆஹான்னு...ஏன்?

ரஜினி பேட்டி பார்த்தபோது..நான் வந்தாலும் வருவேன், வராட்டியும் இருப்பேன் என்று நம் வானிலை அறிக்கை மாதிரிப் பேசிய போது அட....போங்கய்யா...நீங்களும் உங்க ரசிகர் மன்ற சந்திப்பும்...வருத்தம் தெரிவித்தாராம் மன்னிப்புக் கேட்கவில்லையாம்...எதார்த்தம் துளிக் கூட எட்டிப் பார்க்காத அப்படி ஒரு சந்திப்பு... ஏதோவோர் சலிப்பு..அடச்சீன்னு..ஏன்?

என்னதான் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை, நடிகர்கள் உண்ணாவிரதம், நன்கொடை வசூலிப்பு என்று ஆயிரம் இருந்தும்....No peace of mind...இதெல்லாம் எவ்வளவு தூரம், எத்தனை காலம் என்ற நெருடலும் ஆதங்கமும்...நிஜமான அமைதி என்று கிட்டும் என்ற எதிர்பார்ப்பும்....ஐயோன்னு..ஏன்?

என்னதான் கும்ப்ளே நல்ல ஆட்டக்காரர் என்றாலும், இதே போல் முடிவெடுத்துச் சீக்கிரம் பெரிசுங்களும் இளசுங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை (நப்பாசை?)...அப்பாடான்னு..ஏன்?

Thursday, October 23, 2008

அனைவருக்கும் வணக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

நீ...ண்..ட நாட்களுக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..பலவித காரணங்களால் இந்தப் பக்கமே வர முடியாமல் போயிருந்தது...
தமிழ்மணத்தை அவ்வப்போது நுகர்ந்து பார்த்தாலும் கூட..மறுமொழி இடமுடியாமல் போனது அவ்வப்போது..இப்போது கூட மறுமொழி இடமுடியவில்லை..தொழில்நுட்பக் கோளாறு என்ன எதுவென்று ஆராய்ந்து சீக்கிரம் சரி செய்யப் பார்க்கிறேன்.

மூன்று மாத காலம் இந்தியா வந்திருந்தேன்..ஒவ்வொரு ஊரைக் கடக்கும் போதும் பதிவுலக நண்பர்களின் ஏதாவது ஒரு நினைவுப் பின்னல் தொடர்ந்து கொண்டே வந்தது..திரு,&திருமதி சீனா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அனவருக்கும் மீண்டும் வணக்கம்....உங்கள் பதிவுகளிலும் என் பதிவிலும் மீண்டும் சந்திப்போம்...

Tuesday, March 4, 2008

சின்னப் பெண்ணான போதிலே - கண்மணி tag

பள்ளிக்கூடப் பாட்டுப் போடச் சொன்ன கண்மணி தொடர் விளையாட்டுக்காக..




அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு,
ஈயைத் தூர ஓட்டு!



நிலா நிலா ஓடி வா!
நில்லாமல் ஓடி வா!
மலை மேலே ஏறி வா!
மல்லிகைப்பூ கொண்டு வா!




கைவீசம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!



பிஸ்கெட் பிஸ்கெட்
ஜாம் பிஸ்கெட்
என்ன ஜாம் கோஜாம்
என்ன கோ டிகோ
என்ன டி பன்ரொட்டி!


கீரை விதைப்போம்
கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை விதைத்தால்
கோழி கிளறும்
போடா வர மாட்டேன்!





Sunday, January 6, 2008

மொக்கை tag - முடிவுகள் பலவிதம்

சீனா சார் ரசிகனின் மொக்கை tag ல் என்னை இணைத்திருக்கிறார். நன்றி அவருக்கு.

இது திரைப்பட மொக்கை..ரொம்ப நாளாவே சில தமிழ்த் திரைப்படங்களோட முடிவுகள் பத்தி எழுத நினைப்பு..இப்போ எழுதலாம்..

மூன்றாம் பிறை: இன்றும் கூடப் பாதிக்கும் முடிவு..அந்தப் பாடல்களைப் பார்க்கும்போதே இன்னும் கூட முடிவுதான் நினைவுக்கு வரும்.

சிந்து பைரவி: அபத்தமான முடிவு...சிந்து சொல்வார்...இரண்டு கல்யாணம் செய்து கொண்டால் கே.பி. செஞ்சுக்கிட்டார்..நாங்களும் செஞ்சுக்குவோம் 2 கல்யாணம்னு ரசிகர்கள்
சொல்வார்கள்...ஏன்...கல்யாணம் செய்யாமல் குழந்தை பெத்துக்கிட்டதை ரசிகர்கள் பின்பற்ற மாட்டார்களா என்று தோன்றியது இந்த அபத்த முடிவைப் பார்க்கும்போது...இதே முடிவுக்கு வேறு காரணம் சொல்லியிருக்கலாம்.

சம்சாரம் அது மின்சாரம்: நச் முடிவு.

வசந்த மாளிகை, கிரீடம், முகவரி: சோகமயமான முடிவை என் போல் சந்தோஷ முடிவை விரும்பும் ரசிகர்களுக்காக மாற்றியமைத்தார்கள்.

விதி: இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றவைத்த முடிவு.

காதல்: இப்படியும் நடக்குமா என்று நெகிழ வைத்த முடிவு..

கல்லூரி: இது தேவையா என்று சலிக்க வைத்த முடிவு.

நூறாவது நாள்: எதிர்பார்க்காத முடிவு.

தாமரை நெஞ்சம்: கதாசிரியாரான நாயகி தன் முடிவையும், தன் கதை நாயகியின் முடிவையும் ஒருசேரத் தேடும்..மனம் கனக்க வைக்கும் முடிவு.

வெயில்: தம்பி உயிரோடு இருப்பதையாவது தெரிந்து கொண்டு நாயகன் இறந்திருக்கலாமே என்று ஆதங்கம் ஏற்படுத்திய முடிவு.(இதே போல்தான் கஜினி: அசின் சஞ்சய் ராமசாமி
யாரென்று அறிந்தபின் இறந்திருக்கலாம் என்று தோன்றியது.)

அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்: சோக முடிவுதான் என்றாலும், எதார்த்தம் என்பதால் படத்துக்கே வெற்றி தந்தது இந்த முடிவு.

சிறை: சமூகத்தையே அந்த காலத்தில் ஒரு கலக்கு கலக்கிய புரட்சிகரமான முடிவு.

புதுமைப்பெண்: வீட்டை விட்டு வெளியேறுவது புதுமை என்று காட்டிய அபத்த முடிவு.

பருத்திவீரன்: என்னவென்று விவரிக்க இயலாத உணர்வை ஏற்படுத்திய முடிவு.

சேது: வாய்க்குள் கையைவிட்டு இதயத்தைத் தொட்ட முடிவு.

யப்பாடி..இன்னும் நிறைய இருந்தாலும் இப்போதைக்குப் போதும்னு நினைக்கிறேன். அடுத்து நான் இணைப்பவர்கள்:

1. கோவி.கண்ணன்
2. வவ்வால்
3. கண்மணி (மதுரைக்காரவங்களுக்கு யாருமே எதிர்க்கட்சி கிடையாது.)
4. காட்டாறு

Sunday, November 11, 2007

மெகா சீரியலும் தாய்க்குலமும்

மெகா சீரியல் குறித்துப் பல வித விமர்சனங்கள் அவ்வப்போது பலர் வாயிலாகக் கேட்டறிகிறோம்...பலவிதமான நகைச்சுவைத்துணுக்குகள், பல கொடூரமான தாக்குதல்கள் படித்திருக்கிறோம்...

இத்தனை தாக்குதல் தேவையா என்பது என் எண்ணம்..தாக்குவது என்பது இன்றைய fashion என்றாகிவிட்டது..அதுவும் தாய்க்குலங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்களே..ஏதோ தந்தைக்குலங்கள் அதைப் பார்க்கவே பார்க்காதது மாதிரி...பதவி ஓய்வுபெற்ற தந்தைக்குலங்களின் முக்கிய பொழுதுபோக்கே இதுதான்..

இத்தொடர்கள் சில மாற்றங்களை நம் பெண்களிடம் கொண்டு வந்துள்ளன..தொடர்கள் ஆரம்பிக்கும் முன் சமையல் முதல் சகல வேலைகளையும் சுறுசுறுப்பாய் முடித்து...2 அல்லது 3 சானல்களில் ஒரே நேரம் மாறி மாறிப்பார்த்து...நடுவில் வரும் தலைப்புச் செய்திகளையும் பார்த்து நாட்டு நடப்பு அறிந்து கொள்கின்றனர்...சீரியல் வம்புகளில் நாட்டம் அதிகமாக ரியல் வம்புகள் தானாகவே இல்லாமல் போகின்றன...
பாமரத்தனம் சற்றே குறைந்து சில நல்ல விஷயங்களைப் புதிதாகக் கற்றுக் கொள்கிறார்கள்.

நான் சமீப காலத்தில் கண்டது..விரும்பிப் பார்த்தாலும் விழுந்தடித்துக் கொண்டு யாரும் பார்ப்பதில்லை ...முன்பெல்லாம் ஒன்றிரண்டு பகுதிகள் கூடத் தவறவிடாமல் பார்த்தவர்கள் இன்று வாரம் ஒரு முறை பார்த்தால் கூட மீதிக் கதை புரிந்துவிடும் என்று இயக்குநர் பார்வை பெற்றுவிட்டார்கள்..

எனவே தாக்கும் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப் படுத்துவோமே!