Wednesday, November 21, 2007

சிதை(யில்)யும் தமிழ்

மொழியே செம்மொழியே
என் தாய்த் திருமொழியே
இலக்கியம் அழகுசெய்
தனித் தமிழ்மொழியே!

எழுத்தில் மாறி
ஒலியில் மாறி
வடிவில் மாறி
வழியே மாறி..

பிற மொழிக் கலப்பு
உணவில் நெய்யாக
இருந்த காலம் போய்
இன்று
உப்பாகிப் போக

நோயாளிகள் யார்?

நெய் உண்பவர்கள்
என்பார்கள்
உப்பு உண்பவர்கள்.

உப்பு உண்பவர்கள்
என்பார்கள்
நெய் உண்பவர்கள்.

எது எப்படியோ
உணவாவது மிஞ்சினால் போதும்
என்பார்கள் சிலர்.

சிங்காரத் தமிழே
மெல்லச்
சிதையும் தமிழே!

சிதையில் நீ போகாமல்
சீராய்க் காக்கும்
மெய்காப்பாளர்
திருப்பணி பெற்றுத்
துறை தோறும்
துலங்குவாய் தமிழே!

(பி.கு: நானும் சிதைப்பவள்தான்)

9 comments:

ரசிகன் said...

//நெய் உண்பவர்கள்
என்பார்கள்
உப்பு உண்பவர்கள்.

உப்பு உண்பவர்கள்
என்பார்கள்
நெய் உண்பவர்கள்.//

சரியாச் சொன்னீங்க....

ரசிகன் said...

// (பி.கு: நானும் சிதைப்பவள்தான்)//

இத்தேன் எனக்கு ரொம்ப புடிச்சிச்சி..ஹிஹி..

வித்யா கலைவாணி said...

//சிதையில் நீ போகாமல்
சீராய்க் காக்கும்
மெய்காப்பாளர்
திருப்பணி பெற்றுத்
துறை தோறும்
துலங்குவாய் தமிழே!//
காக்க கூப்பிடுவீங்கன்னு பார்த்தா நீங்களும் சிதைக்கிற நம்ம ஜாதியா?
வாங்க எல்லாருமா சேர்ந்து காக்கலாம்.

பாச மலர் / Paasa Malar said...

//இத்தேன் எனக்கு ரொம்ப புடிச்சிச்சி..ஹிஹி..//

//நீங்களும் சிதைக்கிற நம்ம ஜாதியா?
வாங்க எல்லாருமா சேர்ந்து காக்கலாம்//

வருகைக்கு நன்றி..ரசிகன்..

என்னதான் ஆதங்கப்பாட்டாலும் தப்புச் செஞ்சா ஒத்துக்கிறணுமில்ல..

வித்யா..நம்மால முழுசா முடியலன்னாலும் செய்யுறவங்களக் கூப்பிடுவோமே...அந்தத் தமிழாசிரியை மாதிரி..நிறைய பெருக்கான அழைப்பு அது..நம்மைப் போல் 90 சதவிகிதம் இருந்தாலும் அவர்களைப் போல் 10 சதவிகிதம் இருக்கிறார்களே

Sanjai Gandhi said...

இன்றைய சூழலில் சிதைக்கப் படாத மொழி என்று எதுவும் இருக்க முடியாது ஆண்ட்டி.. :)

பாச மலர் / Paasa Malar said...

சிதைக்காமல் இன்னும் இருக்கும் சிலரின் படைப்புகள் அதிகமாகட்டும் என்பதற்கான வேண்டுகோள் இது...

(என்னதான் பொடியன்னாலும் அக்கான்னு சொல்லக் கூடாதா?)

Sanjai Gandhi said...

// பாச மலர் said...

சிதைக்காமல் இன்னும் இருக்கும் சிலரின் படைப்புகள் அதிகமாகட்டும் என்பதற்கான வேண்டுகோள் இது...

(என்னதான் பொடியன்னாலும் அக்கான்னு சொல்லக் கூடாதா?)//
நோ..நோ... என் வயசுக்கு உங்கள அக்கானு எல்லாம் கூப்ட முடியாது :P அத்தைதான் :P

பாச மலர் / Paasa Malar said...

ஆஹா...நீங்க அந்த group ஆ? இப்போதானே உங்க வீட்டுக்கு வந்து பாத்தேன்..அப்ப அத்தைதான்...

Sanjai Gandhi said...

// பாச மலர் said...

ஆஹா...நீங்க அந்த group ஆ? இப்போதானே உங்க வீட்டுக்கு வந்து பாத்தேன்..அப்ப அத்தைதான்...//
ஹிஹி.. அது.. :)