Tuesday, January 31, 2012

உயிரின் ஏழாவது சுவை


உயிரின் எந்த உணர்வும்
உணர்வின் எந்தக் கோணமும்
கோணத்தின் எந்தக் கூர்ப்பும்
கூர்ப்பின் எந்தக் கீறலும்
கீறலின் எந்த வலியும்
வலியின் எந்தத் துளியும்
துளியின்   எந்தச் சுகந்தமும்
சுகந்தத்தின் எந்த நுகர்வும்
நுகர்வின் எந்தப் பகிர்வும்
பகிர்வின்  எந்தச் சுவையும்.....

அந்தாதியாய்
என்றென்றும் தொடரும்
உயிரின் ஏழாவது சுவை
காதல்...

8 comments:

ராமலக்ஷ்மி said...

அன்பின் சுவையை அழகுறச் சொல்லும் அந்தாதி அருமை மலர்!!!!

கோமதி அரசு said...

உயிரின் ஏழாவது சுவை அருமை.

கோபிநாத் said...

ம்ம்ம்...நல்ல நடை ;-)

ஜீவி said...

அந்த ஏழாவது சுவைக்குத் தான் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது போலும். அது போயின் உயிரின் உயிப்பே போய்விடும் போலும்!

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..

பாச மலர் / Paasa Malar said...

//உயிரின் ஏழாவது சுவை அருமை//

நன்றி....கோமதி மேடம்

பாச மலர் / Paasa Malar said...

.//நல்ல நடை//

நன்றி கோபி..

பாச மலர் / Paasa Malar said...

//அந்த ஏழாவது சுவைக்குத் தான் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது போலும். அது போயின் உயிரின் உயிப்பே போய்விடும் போலும்!//

உண்மை அதுதானே ஜீவி....தனி மகுடம் தான்..