Tuesday, May 4, 2010

இன்னுமோர் உலக அதிசயம்!

வார்த்தைகளின் கீறலில்
பதிந்து நிற்கும் ரணங்கள்...

மௌனத்தின் கனத்தில்
சூழ்ந்து சுழலும் பயங்கள்...

சிந்தனைகளின் சத்தத்தில்
உதிர்ந்து விழும் உணர்வுகள்...

நாளதன் ஓட்டத்தில்
நலிந்து மறையும் சினங்கள்...

ஊடல் மடியும் கணத்தில்
வான்வரை வியாபிக்கும் காதல்....

இனிமையான
இன்னுமோர் உலக அதிசயம்!

6 comments:

ஜில்தண்ணி said...

வரிகள் ரொம்ப நல்லா இருக்கு
தொடர்ந்து எழுதுங்கள்
காதல் கவிதைகளை

நம்மளோடதையும் பாருங்க

www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

ராமலக்ஷ்மி said...

அழகு பாசமலர்:)!

கிருத்திகா ஸ்ரீதர் said...

உண்மைதான் மலர்

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜில்தண்ணி, ராமலக்ஷ்மி, கிருத்திகா

ஜீவி said...

//வான்வரை வியாபிக்கும்...//

இந்த வார்த்தைப் பிரயோகம் மிகவும் அழகாக இருந்தது. அதன் நீட்சியையும், அடர்த்தியையும், திண்மையையும் சொல்ல எவ்வளவு அருமையான சொல்லாட்சி என்று வியந்து மகிழ்ந்தேன்.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜீவி...