Sunday, March 14, 2010

குறளின் குரல் ஏன் வசப்படுத்துகிறது?

நம் அனுபவம், உணர்வுகள், நம் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் பெரும்பாலான நேரங்களில் பிறருக்கும் பொதுவாக அமைகிறது. ஒருவருக்கொருவர் பலவகைகளில் வேறுபட்டு நின்றாலும் சில உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை.

'நீயும் இதை உணர்ந்திருக்கிறாயா?'; 'நீயும் இதை அனுபவித்திருக்கிறாயா?' 'உனக்கும் இதே போல் நடந்திருக்கிறதா?' ஒத்த நிகழ்வுகள், உணர்வுகள் உள்ள நபர்களைப் பார்க்கும் போது, பழகும் போது ...சற்றே ஆழ்ந்து பார்க்கும் போது நம்மையறியாமல் சட்டென்று ஒரு நெருக்கம் வரும். சில புத்தகங்களைப் படிக்கும் போதும், 'அட..இது போல் எனக்கும் நடந்திருக்கிறதே..இதை நானும் உணர்ந்திருக்கிறேனே' என்ற உணர்வுப் பொறி தட்டும்.

அப்படிப் பல பொதுவான உணர்வுகள், நெறிகள்..இவற்றைத் தொகுத்து வழங்கும் திருக்குறள் அனைவரையும் கவர்வதற்கு இதுவே முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் விரவி நிற்பதுதான் மனித வாழ்க்கை. இம்மூன்றின் சார்த்தையும் வடிகட்டிக் கொடுக்கும் வழிகாட்டியாகும் இந்தத் திருநூல்.

வாழ்க்கை அகராதி என்று திருக்குறளைக் கூறலாம். வினாவுக்கு விடையாய், பிரச்சனைக்குத் தீர்வாய், ஐயம் தெளிவிக்கும் விளக்கமாய், வழிகாட்டியாய்...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பார்த்தேயறியாத வள்ளுவரோடு ஒரு நெருக்கம் வருகிறதென்றால்,...அடடா...இதோ ஒரு கவிஞர்..என்னைப் போலவே நினைக்கிறாரே..எனக்காகவே நினைக்கிறாரே...என் உணர்வுகளைப் பதித்திருக்கிறாரே...என் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே....எப்படி நடக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரே..எவையெல்லாம் கூடாது என்று எச்சரிக்கிறாரே..என்று பரந்து விரிந்து கொண்டே போகிறது என் வியப்பு..ஈர்ப்பு.

இதே போல்தான் குறளின் குரல் அனைவரையும் வசப்படுத்தி வாழ்க்கையை வாசப்படுத்தி நிற்கிறது. மனோதத்துவம் அறிந்த புலவனின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பு எனபதாலேயே இதன் கருத்துகள் காலத்தை வென்று அனைவரையும் கவர்ந்து, ஈடு இணையின்றி இலக்கிய உலகத்தில் கோலோச்சி நிற்கிறது.

இந்தக் குரலின் ஆதிக்கத்தை அனுபவிக்கும் நாம் அனைவரும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!

11 comments:

ராமலக்ஷ்மி said...

//காலத்தை வென்று அனைவரையும் கவர்ந்து, ஈடு இணையின்றி இலக்கிய உலகத்தில் கோலோச்சி நிற்கிறது.//

இதுவும்..

//இந்தக் குரலின் ஆதிக்கத்தை அனுபவிக்கும் நாம் அனைவரும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!//

இதுவும் எத்தனை உண்மை! நல்ல பதிவு பாசமலர்.

கோபிநாத் said...

நல்ல பதிவு....இன்னும் கூட நிறைய விரிவாக உங்கள் கருத்துகளை சொல்லியிருக்கலாம்.

திரும்ப படிச்சிங்களா சமீபத்தில்...நான் இப்போது பொன்னியின் செல்வன் படிச்சிக்கிட்டு இருக்கேன்...யப்பா!!!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறளின் குரல் அனைவரையும் வசப்படுத்தி வாழ்க்கையை வாசப்படுத்தி நிற்கிறது//

நல்லாச் சொன்னீங்க,பாசமலர்.

Unknown said...

உண்மைதான்.”ஈன்ற பொழுதில்”,
யாகாவாராயினும்””மனத்துக்கண்” (இன்னும் பல)போன்றவை பிராக்டிகலாக பொருந்திவரும்.

அதனால்தான் உலகப்பொதுமறை.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி...இந்த இலக்கியங்கள்தான் இன்னமும் நமக்கு உறுதுணையாக நிற்கின்றன..

பாச மலர் / Paasa Malar said...

கோபி,

பொன்னியின் செல்வன் எத்தனை தடவை படித்தாலும்..ஒவ்வொரு முறையும் புதிதாகப் படிப்பது போல் ஓர் அனுபவம் எப்போதும் கிட்டும்....நன்கு ரசித்து அனுபவியுங்கள்..

பாச மலர் / Paasa Malar said...

நன்றி முத்துலெட்சுமி, ரவிஷங்கர்..

எதார்த்தத்தின் அழகுதான் இலக்கியம் தருன் அனுபவம்

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

தமிழ் said...

//,...அடடா...இதோ ஒரு கவிஞர்..என்னைப் போலவே நினைக்கிறாரே..எனக்காகவே நினைக்கிறாரே...என் உணர்வுகளைப் பதித்திருக்கிறாரே...என் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே....எப்படி நடக்க வேண்டும், ரசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறாரே..எவையெல்லாம் கூடாது என்று எச்சரிக்கிறாரே..என்று பரந்து விரிந்து கொண்டே போகிறது என் வியப்பு..ஈர்ப்பு.


//உண்மை தான்

கிருத்திகா ஸ்ரீதர் said...

"இந்தக் குரலின் ஆதிக்கத்தை அனுபவிக்கும் நாம் அனைவரும்தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்! "
உண்மைதான்...

கண்மணி/kanmani said...

அம்மாடி எங்கிட்டுப் போனீக இம்புட்டு நாளா
வெல்கம் பேக்

மலர் என்னைக்கேட்டால் உலகின் முதல் அதிசயம் 'திருக்குறள்' என்பேன்.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நிகழ்விலும் அத்துணைப் பரிமாணங்களிலும் பொருந்தி வருதே எப்படின்னு மலைப்புத் தோன்றும்.
வள்ளுவர் என்ன திரிகாலம் உணர்ந்த ஞானியா ன்னு தோணும்.
இதைத்தான் நீங்க பதிவாக்கிட்டீங்க.
சோ எல்லோருக்கும் சேம் ஃபீல் தான் போல.