Sunday, June 26, 2011

ஊடலாடல்




மலர மறுத்து
இதழ்களை
இறுக்கி
இழுத்துப் பிடிக்கும்
பூவுக்கும்
புயலின் வேகம்..

மலர மறுக்கும்
இதழ்க் கதவுகளைத்
தட்டித் திறக்க
முட்டி மோதும்
தென்றலுக்கும்
புயலின் வேகம்..

ஆணவங்களுக்குள்
அவசர மோதல்;
அகம்பாவங்களுக்குள்
அளவற்ற அளவளாவல்;

ஊடலாடும் பொழுதுகள்..

கத்தியின்றி
இரத்தமின்றி
சத்தமின்றி
முத்தமின்றி
நடந்தேறும் ஒரு
தற்காலிகத்
தனியுத்தம்;

வென்றவர் தோற்றிட
தோற்றவர் வென்றிட..
அதிசய யுத்தம்;

காதல் உணர்வுகள்
ஊசலாடும் உள்ளங்கள்
ஊடலாடும் பொழுதுகள்
உன்னதமானவை;

வாழ்க்கைப் பூவுக்கு
வாசம் தரும்
சுவாசம் தரும்
காதல் வேர்கள்..

காதல் வேருக்கும்
வாசம் தந்து
ஆழமாய் அழுத்திப்பிடிக்கும்
ஊடல் பூக்கள்..

4 comments:

ராமலக்ஷ்மி said...

ஊடல் பூக்கள் வாசமாக..

அருமை மலர்:)!

நானானி said...

நல்லாருக்கு.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி, நானானி..

கோபிநாத் said...

அருமை ;)