Monday, December 20, 2010

காதல் கொள்!

நிகழ்வுகள்
கிடுக்கிப்பிடியில்
கழுத்தை நெரிக்கும்.

காதல் கொள்.
அது
கழுத்து நீவிக்
கவலைகள் சுத்திகரிக்கும்.

உணர்வுகள்
உடலெங்கும்
ஊசிகள் குத்தும்.

காதல் கொள்.
அது
ஊசிகள் பிடுங்கி
உபாதைகள் நீக்கும்.

குழப்பங்கள்
கடலில் அலையெனச்
சுழன்று தொடரும்.

காதல் கொள்.
அது
எதிர்நீச்சல்
கற்றுக் கொடுக்கும்.

வாழ்வில்
வெற்றி கொள்ள..
வாழ்வை
வெற்றி கொள்ள...

காதல் கொள்.

5 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான வரிகள் பாசமலர்.

Learn said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

தமிழ் said...

அருமை

தமிழ் said...

/வாழ்வில்
வெற்றி கொள்ள..
வாழ்வை
வெற்றி கொள்ள...

காதல் கொள். /

உண்மை

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com