Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Tuesday, September 11, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

மீண்டும் மீண்டும் சிவகாசி விபத்துகள்

ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு குற்ற உணர்வுடன் தான் பட்டாசு ஒலி ஒளி வேடிக்கையை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆபத்தும் விபத்தும் எந்தத் துறையிலும் உண்டுதான் என்றாலும், வருடம் தவறாமல் நிகழும் சிவகாசி விபத்துகள் மனதைப் பிசைகின்றன.

கல்வியைப் பற்றிய புரிந்துணர்வு

நீயா நானா வழங்கி வரும் தரமான விவாதங்களில் கல்வி சம்பந்தப்பட்ட விவாதங்கள் என்றுமே என்னைக் கவர்ந்தவை. சமீபத்திய விவாதம் ஒன்றில் ஒரு மாணவன் கூறியது: எங்களுக்குப் பெற்றோர் சுதந்திரம் கொடுக்கிறார்கள் கல்விப் பிரிவைத் தேர்வு செய்வதில்...ஒன்று இஞ்சினீயருக்குப் படி..அல்லது டாக்டருக்குப் படி..
.
நகைச்சுவை படச் சொன்னாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆதங்கமும் வெளிப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பதினோராம் வகுப்பில் பொறியியல், மருத்துவம் சார்ந்த பிரிவுகளைத் தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் அல்லது வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. பிள்ளைகளின் விருப்பத்தை அடக்கிவைத்துவிடுகின்றனர். இந்த இரண்டு துறைகளைத் தவிர மற்ற படிப்புகள் எல்லாம் நன்கு மதிப்பெண் வாங்காதவர்களுக்கு என்ற பரவலான எண்ணம் பெற்றோர்க்கு மட்டுமல்லாமல் சமூக எண்ணமாகவே ஆகிவிட்டது.

எந்தப் பிரிவிலும் நன்கு படித்து, அத்துறையில் உச்சத்தை அடைய முடியும் என்பது புரியாமலே போகிறது.

கல்வி பற்றிய புரிந்துணர்வு...விழிப்புணர்வு நாம் காண இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டும்?!

சில வாழ்வியல் எதார்த்தங்களுக்காய், உளவியல் எதார்த்தங்களும் உண்மையான ஆசைகளும், இயல்புகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

ஹவுஸ் ஹஸ்பெண்ட்

இந்தியா வந்திருந்த போது, உறவுக்கார இளைஞனைச் சந்திக்க நேர்ந்தது. பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

அவனுடைய எதிர்பார்ப்பு: ஒரு டிகிரி இருந்தால் போதும் - குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிகொடுக்க, படித்த பெண் வேண்டும்தான்...ஓரளவு வெளி உலகம் தெரிந்திருக்கும். வேலை பார்க்கும் பெண் வேண்டாம்..வீட்டைக் கவனிக்க முடியாமல் போகும். என் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால் நானும் தம்பியும் ரொம்பக் கஷடப்பட்டிருக்கிறோம்.

இதையே பெண்ணும் எதிர்பார்த்தால் என்ன செய்வாய்? என்ற கேள்விக்கு அவன் தந்த பதில்: வேலைக்குப் போகாமல் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்க நான் ரெடி. என்னால் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் ஹவுஸ் ஹஸ்பெண்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யாராவது ரெடியாக இருப்பார்களா?

கேள்வி சரியானதுதான்..பதில் சொல்லத்தான் தெரியவில்லை...

இன்னும் தேடப்படும் நட்புகள்...


முகப்புத்தகத்தின் மூலம் பல முகங்களைத் தேடிப்பிடித்து விடுகின்றோம் என்றாலும், தேடுதலுக்கு அகப்படாத பல நட்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உலகம் சிறியது என்று சொல்கின்ற போதே இச்சிறிய உலகத்துள் ஒளிந்து கொண்டிருக்கிற சில நட்புகளைத் தேடிப்பிடிக்க முடியாமல் போகின்றதே என்ற ஆதங்கமும் மிகுதியாக இருக்கிறது.

Monday, April 2, 2012

சில நேரங்களில் சில உணர்வுகள்

இரண்டு திரைப்படங்கள்:

காதலில் சொதப்புவது எப்படி? தலைப்பு ஒரு மாதிரி இருக்கிறதே என்று யோசனையுடன் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்துக்கு
மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆணாக ஆணும், பெண்ணாகப் பெண்ணும் யோசிப்பதில் உள்ள சிக்கல்கள், ஈகோப் ப்ரச்னைகளால் வரும் பிரிவுகள், மேட் ஃபார் ஈச் அதர் என்று ஒன்றும் விசேஷமாக இல்லை..அப்படி ஆக்கிக் கொள்வதுதான் விசேஷம் என்ற படிப்பினை..நன்றாக இருக்கிறது.

மூணு 3: ஒய் திஸ் கொலவெறி கொலவெறி?

இளையராஜா, சூர்யா, ரோஜர் ஃபெடரர்

இந்த மூன்று பேருக்கும் பொதுவான ஒரு சிறப்பு இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம். இவர்களால் கவரப்படாதவர்கள் இருக்கலாம். ஆனால், இவர்களைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. என்றும் இளமையான இளையராஜா பாடல்கள், ரோஜர் விளையாடும் தளங்களில் விசிறிகளின் ஆரவாரம், சூர்யாவின் திரைமுகம் மட்டுமல்ல..  'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி...என்னுடைய இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தி நிற்கின்றது. 'அய்யய்யோ...எனக்கு இவரைப் பிடிக்கவே பிடிக்காது' என்று யாருமே சொல்லிவிட மாட்டார்கள் என்றொரு எண்ணம்.

எழுத்தாளர் சுஜாதாவும் இந்தப் பட்டியலில் இருந்தார்..ஆனால் அவரைப் பிடிக்காது என்னும் சிலரைச் சந்திக்க நேர்ந்தது..

ஒரு தகப்பனா இப்படி?

சமீபத்திய செய்தி ஒன்று...தேர்வில் மதிப்பெண்கள் எதிர்பார்ப்புக்கும் குறைவாக வாங்கிய தன் மகளை, கோவில் வாசல் ஒன்றில் தட்டேந்திப் பிச்சையெடுக்கவைத்தாராம் ஓர் அப்பா...என்னவென்று சொல்வது?

ஆசிரியைகளின் அட்டூழியம்

கொஞ்ச காலம் முன், எல்.கே.ஜி குழந்தையிடம் பாலியல் தொந்தரவுகள் செய்த இரண்டு ஆசிரியைகளைப் பற்றிய செய்திகள்..

கடந்த 2 வாரங்களுக்கு முன், ப்ளஸ் டூ மாணவனிடம் தகாத உறவுகொண்டு, 21 வயதானபின் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் 37 வய்து ஆசிரியை...ஓடிப் போன இவர்களைத் தேடிப்பிடித்த மாணவன் அப்பா...

வக்கிரங்கள் ஆசிரியைகளிடமா? இவர்களை என்ன செய்தால் தகும்?

Thursday, October 6, 2011

அரசியல் மங்காத்தா!!

என்ன ஒரு பரிமாண வளர்ச்சி! டார்வின் கோட்பாடு கூறுவது உடற்கூறு தொடர்பான 'survival of the fittest'...ஆனால் நம் தற்கால..ஏன், வருங்கால அரசியலைக் கருத்தில் கொண்டால், டார்வின் கோட்பாடு உடற்கூற்றைத் தாண்டிய உளவியல் தொடர்பானதாக இருப்பது என்ன பெரிய கொடுமை.... யாரை மிதித்து யார் முன்னேறுவது..இதுவும் உளவியல் தொடர்பான survival of the fittest...

எந்த ஒரு கட்சி மீதும் நம்பிக்கையில்லை...எந்த ஒரு தலைவனுக்கும் / தலைவிக்கும் கொள்கைகளும் இல்லை..கொள்கை பெயரளவில் இருந்தாலும் அதைப் பின்பற்றுவதாக இல்லை...எதில் வேறுபட்டாலும் இதில் மட்டும் அரசியல்வாதிகளுக்குத்தான் என்ன ஒற்றுமை!

உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவது கொஞ்சம் மக்களுக்காக ஏதோ செய்து வந்தார்கள்..இந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அதிசயங்களைப் பார்த்தால், உள்ளூர்த் திட்டங்கள் 10 சதவிகிதமாவது நிறைவேற்றப்படுமா என்று சந்தேகிக்க வைக்கின்றன...

  • வாக்காளர்கள் எண்ணிக்கையோ என்று மலைக்குமளவு வேட்பாளர் எண்ணிக்கை...
  • தேர்தல் அதிகாரி யார் என்று தெரியாத கட்சித் தலைவர்..
  • கூட்டணியை அவ்வப்போது கழற்றி, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாதம்...
  • காசு வாங்கிக்கொண்டு வேட்புமனு திரும்பப் பெறும் வாங்கும் வேட்பாளர்..
  • தன்னையறியாமலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு வேட்பாளர்..
  • அதிக வேட்பாளர்கள் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை சரியானதுதானா என்று நீதிமன்றத்தில் வரப்போகும் வழக்குகள்...
  • இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

தொலைக்காட்சிச் செய்திகள் பார்ப்பாவர்கள் தொடர்கள் பார்ப்பவர்களைத் தூற்ற...

தொடர்கள் பார்ப்பவர்கள் செய்திகள் பார்ப்பவர்களைத் தூற்ற..

ஆட்சி அரசியலும் சரி..குடும்ப அரசியலும் சரி...

எதுதான் சரியாக இருக்கிறது?

சரிதான்...inky pinky ponky  முறையில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் என்னதான் ஆகப்போகிறது..

அரசியல் மங்காத்தா ஆட்டத்தில் மீண்டும் மீண்டும் இழப்பது மக்கள் மட்டுமே...

Tuesday, March 15, 2011

சில நேரங்களில் சில உணர்வுகள்

சுனாமியாஞ்சலி

அலை அழகு
அமைதி அழகு
மாறும் நிறம் அழகு
உதிக்கும் சூரியன் அழகு
மறையும் சூரியன் அழகு
வேக நடை அழகு
மெது ஓட்டம் அழகு
மணல் கோபுரம் அழகு
தளும்பும் மீன்படகு அழகு.

ஆனால்
சுனாமி...சுனாமி..
அழகை மறக்கவைத்த ஆபத்து.

சீறும் சுனாமியே
சீக்கிரம் அமைதியாகுக!

அணு உலைகள் வெடிப்பு
உலகுக்கு அபாய எச்சரிப்பு..

இயற்கையுடன் பகைக்கின்
வேரோடு கெடும்..

பொன்னியின் செல்வன்

அவ்வப்போது அறிவிப்புகள் மாறி மாறி வந்தாலும், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியானதொரு தகவல். விஜய், அனுஷ்கா, ஆரியா மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா குந்தவை, விஜய் ஜோடி என்கிறார்கள். அப்படியானால் விஜய்தான் வந்தியத்தேவன்...மிளிர்வார் என்றுதான் நினைக்கிறேன்..அனுஷ்கா வேடத்துக்குப் பொருத்தம்தான்..பாத்திரத்தில் எவ்வளவு தூரம் ஜொலிப்பார்?! குந்தவையின் குறும்பு வருமா? மிடுக்கு வருமா? கம்பீரம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

விஷால், விக்ரம் பேச்சையே காணோம் இப்போது..


மகேஷ் பாபு, ஆதித்த கரிகாலன்...சூர்யா ராஜராஜ சோழன் என்றால்..ஆரியா யார்?

நந்தினி வேடம் யாருக்கு?

எப்போது படம் வரும் எப்போது பார்ப்போம் என்றிருக்கிறது..

வரும்...ஆனா வராது....

மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலங்களில் நிலவி வரும் சூழல், சவூதி அரேபியாவிலும் சூடு பிடிக்கக்கூடும் என்ற நிலையில்..மார்ச் 11 கிளர்ச்சி மற்றும் ஊர்வலங்கள் எதிர்பார்க்கப்பட்டன....கண்டிப்பாக இங்கேயும் ப்ரசனை வரும் என்றும், அமைதியை விரும்பும் நாடு என்பதால் அப்படி ஏதும் வராது என்றும் எதிர்பார்க்கப்பட்டது..மார்ச் 11 அமைதியாகவே போனது..

சவூதி இளவரசர் அல் வாலித் சொன்னது போல் இது 'tempest in a tea cup' ... 'Saudi is Saudi ..it is no Egypt, no Tunisia, no Libya'...அமைதி இப்போதைக்கு நிச்சயம்...

எது எப்படியோ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

சின்னதாய் ஓர் இந்தியப் பயணம்

மார்ச் 16-30 இந்தியப்பயணம்...மிகவும் குறுகிய காலம்..பரபரவென்று பறந்து கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ரசித்து அனுபவிக்கப் போகிறேன்..