Friday, June 18, 2010

ஒற்றைச் சிவப்பு ரோஜா


நந்தவனச் சோலையில்
பதமான சூழலில்
இதமான நறுமணத்துடன்
வானவில் நிறத்துடன்
ஆயிரமாயிரமாய்ப்
பூத்து நிற்கும்
ரோஜாக்கூட்டமாய் உறவுகள்..

பாலைவனச் சோலையில்
பதப்படுத்தப்பட்ட சூழலில்
மிதமான மணத்துடன்
சிவப்பு நிறத்துடன்
தனிமையில்
பூத்துச் சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்க் காதல்...

6 comments:

சந்தனமுல்லை said...

ரசித்தேன்!
படமும் அழகு!

வல்லிசிம்ஹன் said...

படமும் அழகு.
உறவுகள் சூழக் காதலிப்பது ஒரு சிலிர்ப்பு. தனியாகப் பூக்கும் காதலுக்கு இன்னும் உரம் இருக்கும் என்று நம்புகிறேன் மலர்.

ராமலக்ஷ்மி said...

நந்தவனச் சோலையில் உறவுகளின் கூட்டமாய், பாலைவனச் சோலையிலே உயர்வானதொரு காதலாய்.. ரோஜா ரோஜாதான். பாசமலர் கவிதை கவிதைதான். அருமை.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி சந்தனமுல்லை...படம் உபயம்..இணையம்..

பாச மலர் / Paasa Malar said...

வல்லிம்மா...எல்லா உறவுகளில் இருந்து சற்றே வித்தியாசாமானது காதல் உறவு என்று சொல்ல வந்தேன்...

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ராமலக்ஷ்மி..